தங்களுடைய பிள்ளைகள் மட்டுமின்றி எல்லா பிள்ளைகளின் கல்வித் தரமும் அதிகரிக்க வேண்டும் என நல்லெண்ணத்தோடு செயல்படுகிறார்கள். தற்போது வெறுமனே முன்பள்ளிக் கல்வியில் மட்டுமன்றி தங்கள் பிள்ளளைகள் மேலதிக திறன் விருத்திகளை பெறவேண்டும் என்ற ஆர்வத்தோடும் செயல் படுகிறார்கள். உதாரணமாக பொகவந்தலாவை பிரட்வெல் முன்பள்ளிப் பெற்றார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கணனிப் பயற்சியும்ää நவீன கற்றல் உபகரணங்களையும் பயன்படுத்தி கற்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக பிள்ளைகளை பொகவந்தலாவையில் உள்ள நவீன முன்பள்ளிக்கு அழைத்து சென்று அந்த பயிற்சிகளை வழங்குவதற்காக மாதாந்த பெற்றார் கட்டணத்தை விட மேலதிகமான ஒரு தொகையை வழங்கி வருவது மட்டுமின்றி சில வேளைகளில் தங்கள் பிள்ளைகளை அவ்வாறான இடத்துக்கு அழைத்து செல்வதற்காக ஒரு நாள் வேலையை கூட தியாகம் செய்ய தயாராக இருக்கிறார்கள். செபல்டன் டீபீää என்சீää கொடியாகலை மத்தியபிரிவு பெற்றார்களும் இதுபோன்ற செயல்பாடுகளுக்கு உதவியிருக்கிறார்கள். இவ்வாறான செய்லபாடானது பெற்றாருக்கு கல்விச்சாலைக்கும் ஆரம்பமுதலே நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி கல்விச் செயல்பாடுகிளில் அவர்களின் பங்களிப்பை பெற்று அதனை மதித்துக் ஊக்குவித்தால் பாடசாலைகளோடு பெற்றாரின் தொடர்பை இலகுவாக அதிகரிக்காலாம் என்ற விடயத்தை நிருபிக்;கிறது. கல்விச்சாலைகளோடு பெற்றாரின் பங்களிப்வு எவ்வளவுக்கு அதிகரிக்கிறதோ அந்தளவுக்கு கல்விச்சாலைகளின் தரமும் பிள்ளைகளின் கல்வித் தரமும் உயரும் என்பதே உண்மையாகும்.
“கல்விச்சாலைகளோடு பெற்றாரின் பங்களிப்பை அதிகரிப்பது மலையக கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு அத்தியாவசியமான செயல்பாடாகும்” என்ற தலைப்பில் போகவந்தலாவை நவீன முன்பள்ளி நிலையத்தில் பிரிடோ முன்பள்ளி ஆசிரியைகளுக்காக நடைபெற்ற அமர்வில் கருத்து தெரிவித்து பிரிடோ பிரிட்வெல் முன்பள்ளி சிறுவர் உரிமை சமாதான மேம்பாட்டாளர் திருமதி கிருஸ்ணகுமார் சுபமலர் இவ்வாறு தெரிவத்தார்.

No comments:
Post a Comment