July 28, 2010

பெருந்தோட்டங்களில் முன்பள்ளிகளை நடத்துவதற்கு தோட்ட நிர்வாகங்கள் இடையூறு செய்யவதை அனுமதிக்க வேண்டாம்.

கடந்த பல வருடங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி சீர்திருத்தத்திற்கு பின்னர் எல்லா பிள்ளைகளுக்கும் முன்ளிக்கல்வி அவசியம் என்பதை எல்லா பெற்றார்களும் உணர்ந்துள்ளார்கள். ஆனால் அண்மைக்காலம் வரை பெருந்தோட்ட பகுதி பெற்றார்கள் முன்பள்ளிக்கல்வியின் முன்கியத்துவத்தை அறிந்திருக்கவில்லை. எனினும் முன்பள்ளிக் கல்வி தொடர்பாக பரந்தளவிலான அறிய10ட்டல் காரணமாக முன்பள்ளிக் கல்வியின் முக்கியத்துவத்தை அவர்கள் உணர்ந்து வருகின்றனர். ஆனால் துரதிஸ்ட வசமாக அரச சார்பற்ற நிர்வனங்கள் இயங்கும் தோட்டங்கள் தவிர்ந்த பெரும்பாலான தோட்டங்களில் முன்பள்ளிகள் இல்லாததால் பிள்ளைகளுக்கு முன்பள்ளிக்கல்வி பெறும் உரிமை கிடைக்கவில்லை. தோட்டங்கள் தோறும் முன்பள்ளிகள் உருவாக வேண்டும் அவற்றில் கற்பிக்க பயிற்றப்பட்ட ஆசிரியைகள் இருப்பதோடு முன்பள்ளிகளில் கற்றல் நடைவடிக்கைகளை கண்காணிக்க ஏதாவது ஒரு அமைப்பின் உதவி தேவை.
கால மாற்றத்திற்கு ஏற்ற முறையில் தங்களை மாற்றிக் கொண்டுள்ள தோட்ட நிர்வாகங்கள் முன்பள்ளிகளுக்கு தம்மாலான உதவிகளை செய்து வருகின்றன. ஆனால் இன்னும் சில தோட்டங்கள் முன்பள்ளிகளுக்கு பல விதமான இடைய10றுகளை செய்து வருகின்றன. உதாரணமாக சிறுவர் நிலையத்தில் முன்பள்ளி நடத்துவதால் சிறுவர்களை அங்கு அனுப்புமாறு கட்டாயப்படுத்தல்ää வேறு முன்பள்ளிகளுக்கு செல்லும் சிறுவர்களுக்கு போசாக்கு உணவு கொடுக்க மறுத்தல்ää அவர்களை முன்பள்;ளி நேரத்துக்கு பின்னர் பகல் நேரத்தில் சிறுவர் நிலையங்களில் அனுமதிக்க மறுத்தல் போன்ற பல்வேறு வகைகளில் இடைய10றுசெய்கிறாhகள். பெருந்தோட்ட மக்களை தோட்ட நிர்வாகங்கள் தமக்கு வேண்டிய முறையில் நடத்த நாம் அனுமதிக்க கூடாது. முன்பள்ளி கல்வி பெறும் உரிமை பெருந்தோட்ட சிறுவருக்கும் உண்டு. இந்த உரிமைக்காக நாம் தோட்ட நிர்வாகத்திடம் கையேந்த வேண்டியதில்லை.
இதைவிட பெருந்தோட்டதுறை தொடர்பான அரசினால் அங்கீகரிக்கப்பட்ட முக்கிய அபிவிருத்தி ஆவணமாக கருதப்படுகின்ற “பெருந்தோட்ட சமூகத்தின் சமூக அபிவிருத்திக்கான பத்தாண்டு தேசிய திட்ட” அறிக்கையில்ää கல்வி அபிவிருத்தி எனும் பிரிவின் கீழ் “ஆரம்ப பிள்ளைபராய கவனிப்பும் கல்வியும்” எனும் உபதலைப்பின் கீழ் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
“பெருந்தோட்ட பெற்றோர் மத்தியில் சிறுவர்களுக்கு முன்பள்ளிக்கல்வி வழங்கவேண்டியதன் அவசியம் குறித்தும் பிள்ளைகளை முன்பள்ளி கல்விசாலைகளுக்கு அனுப்பவேண்டிய அவசியம் குறித்தும் விழிப்புணர்வூட்ட வேண்டும். முன்பள்ளிகளை முகாமைத்துவம் செய்வதில் பெற்றோரின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் மிகவும் அவசியமானதாகும். பெருந்தோட்ட இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு அவர்கள் முன்வந்து தாமாகவே முன்பள்ளிகளை ஆரம்பிப்பதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும்.”அரசாங்கமே இவ்வாறு முன்பள்ளிக்கல்வியை வலியுறுத்தும் போது தோட்ட நிர்வாகங்கள் எப்படி முன்பள்ளிகளுக்கு இடைய10று செய்ய அனுமதிக்க முடியும்.

மேலும் பெருந்தோட்ட பகுதிகளில் அதிக எண்ணிக்கையான முன்பள்ளிகளை நடத்திவரும் பிரடோ நிர்வனம் 2005 ஆண்டில் முனபள்ளிகள் தொடர்ப்hக டிரஸ்ட நிர்வனத்துடன் நடத்திய பேச்சு வார்தையின் பின்னர் அப்போதைய டிரஸ்ட் நிர்வன நுவரெலியா பிராந்திய இயக்குனர் 2005.ஏப்ரல் 8ம் திகதி கடிதத்தின் மூலமாக தோட்ட நிர்வாகங்கள் முன்பள்ளிகளுக்கு எல்லா ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் எனவும் முன்பள்ளிகளுக்கு செல்லும் சிறுவர்கள் மாலை நேரத்தில் சிறுவர் நிலையங்களில் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் உறுதியளத்துள்ளார். இந்;த பின்னியில் முன்பள்ளிகளக்குசெல்லும் சிறுவர்களை பகல் நேரத்தில் சிறுவர்நிலையத்தில் சேர்த்துக்கொள்ள முடியாது என சிறுவர் நிலைய தாதிகள் சொல்ல முடியாது. எனவே முன்பள்ளிகளுக்கு எதிர்பபு தெரிவிக்கும் தோட்ட நிர்வாங்களுக்கு மக்கள் தமக்குள்ள உரிமைகளை எடுத்து சொல்லி தங்கள் உரிமையை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும்.

MyFreeCopyright.com Registered & Protected

No comments:

Post a Comment