June 12, 2010

ஜுன் மாதம் 12 - பெருந்தோட்ட சிறுவர்களும் சிறுவர்ளை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிரான உலக தினமும்.

வருடா வருடம் ஜூன் மாதம் 12ம் திகதி சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிரான உலக தினமாக கொண்டாடப்படுகிறது. சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது சிறுவர்களின் அனைத்து உரிமைகளையும், விசேடமாக அவர்கள் தங்கள் எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளுவதற்கு அத்தியாவசியமான கல்வி என்னும் உரிமையையும் பாதிக்கிறது என்பதால் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பட்டு வந்திருக்கிறது. சிறுவர் உரிமை சாசனத்தின் 32ம் உறுப்புரை “தம் ஆரோக்கியம். கல்வி வளர்ச்சி என்பவற்றின் மேம்பாட்டிற்கு அச்சுறுத்தலாய் அமையக்கூடிய வேலைகளில் இருந்து பாதுகாப்பு பெறக்கூடிய உரிமை பிள்ளைகளுக்கு உண்டு” எனக் கூறுவதன் மூலம் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதானது அவர்களின் முக்கியமான உரிமைளை பாதிக்கும் விடயம் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது. ஆயினும் பல்வேறு நாடுகளில் சிறுவர் தொழிலாளர்களை கொண்டு பல்வேறு தொழிற்துறைகள் தொடர்ந்து இயங்கிவந்ததாலும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிராக பல நாடுகளில் நடைமுறையில் உள்ள சட்டங்கள் கூட நடைமுறைப்படுத்தப்படாததால் உலகத்தின் மனச்சாட்சியை தட்டியெழுப்பும் நோக்கத்துடனேயை ஐக்கிய நாடுகள் சபை சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிரான உலக தினத்தை பிரகடனப்படுத்தியது.

சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது அவர்களின் உரிமைகளை மறுத்து அவர்களின் எதிர்கால வாழ்க்கiயில் பாதிப்பை ஏற்படுத்தும் வியடமாக இருப்பினும் பொதுவாக அரசுகளும் பொது அமைப்புக்களும், மக்களும் கூட ஒக்டோபர் முதலாம் திகதி திகதியான அனைத்துலக சிறுவர் தினத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிரான உலக தினத்துக்கு வழங்குவதில்லை. இதனால் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிராக சமூகத்தின மத்தியில் ஒரு எதிர்புணர்வை கட்டியெழுப்புவதில் அதிக முன்னேற்றம் காண்படவில்லை. தற்போதைய புள்ளிவிபரத்தின் படி உலகில் சுமார் 72 மில்லியன் சிறுவர்கள் பாடசாலை செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் நேரடியாகவோ மறைமுகமாகவோ வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மையாகும். ஒவ்வொரு சிறுவருக்கும் கல்வி பெறும் ;உரிமை உண்டு என்பதை உலகம் ஒரு கொள்கைளயாக ஏற்றுக்கொண்டிருப்பதுடன் கல்வி தொடர்பான மிலேனிய இலக்கின் படி 2015 ஆண்டுக்குள் அனைத்து சிறுவருக்கும் தரமானதுமானதும் இலவசமானதுமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதை உலகத் தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இலங்கையிலும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது சிறுவர்களை பாதிக்கும் ஒரு விடயமாகவே இருந்து வந்திருக்கிறது. இந்த விடயத்தில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெருந்தோட்ட சிறுவர்களாவர். வேலைக்கு அமர்த்தப்படும் பெருந்தோட்ட சிறுவர்கள் பாதிக்கப்படும் போது அல்லது மரணமடையும் போது மட்டும் பெருந்தோட்ட சிவில் சமூகமும் அரசியல் தலைவர்களும் அது தொடர்பாக ஓரிரு நாட்கள் குரல் எழுப்பவதோடு எல்லாம் முடிவடைந்து விடுகிறது. கடந்த வருடம் கொழும்பில் சுமதி ஜீவராணி ஆசிய இரு மலையக சிறுமிகள் உயிரிழந்த போது முன்னரை விட அதிகமாக மலையக சமூகம் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிரான தனது உணர்வலைகளை வெளிக்காட்டியது. ஆனால் மலையக சிறுவர்களை வேலைக்கு அமர்த்தப்பட்டு அவர்களினல் கல்வி பாதிக்கப்படுவதால் அவர்களின் எதிர்கால வாழ்விற்கு ஏற்படும் பாரதூரமான பாதிப்புக்களை இல்லாதொழிக்கவும் பெருந்தோட்ட சிறுவர்கள் வீட்டு வேலைக்கு அமர்த்படுவதற்கென்றே உருவாக்கப்பட்டவர்கள் என்ற அவப்பெயரை நீக்கவும் இது போதுமானதல்ல.

நமது அரசாங்கம் சிறுவர்களின் மேம்பாட்டிற்காக ஒரு அமைச்சையே நிறுவியுள்ளது. இந்த அமைச்சுக்களின் கீழ் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, சிறுவர் நல்நடத்தை திணைக்களம் உட்பட பல அமைப்புக்கள் சிறுவர்களின் மேம்பாட்டிற்காகவும் பாதுகாப்புக்காவும் பல பணிகளை செய்வதுடன் சிறுவர்களின் உரிமைகள் பாதுகாத்தல், சிறுவர்களை வேலைக்க அமர்த்துவதற்கு எதிரான பொதுமக்கள் அபிப்பிராயத்தை கட்டியெழுப்புதல் உட்பட பல சேவைகளை செய்து வருகின்றன. இதற்காக உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டுள்ளனா. இதைவிட சிறுவர் உரிமை பாதுகாக்கும் விடயத்திpல் சிறுவர்களையும் சம்பந்தப்படுத்துவதற்காக பிரதேச செயலாளர் பிரிவு முதல் தேசிய மட்டம் வரையில் சிறுவர் சபைகள் அமைக்கப்பட்டு சிறுவர்கள் இவற்றில் அங்கத்துவம் பெற்றிருக்கின்றனர். பிரதேச சபை முதல் தேசிய மட்டம் வரையில சிறுவர் மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் துரதிஸ்டவசமாக இவை எதுவும் ;பெருந்தோட்ட பகுதிகிளில் நடைமுறையில் இல்லை. பெருந்தோட்ட மக்களில் பலருக்கும் ;ஏன் நமது அரசியல் வாதிகளுக்கும் கூட இவ்வாறு அமைப்புக்கள் இருப்பது தொடர்பாகவோ நிதி ஒதுக்கீடு தொடர்பாகவே போதிய அறிவு இருப்பாதாக கருத முடியவில்லை. அவ்வாறு இருந்திருந்தால் இந்த சேவைகளும் வளங்களும் நிதிகளும் பெருந்தோட்ட மக்களுக்கு விசேடமாக சிறுவருக்கு கிடைப்பதை உறுதி செய்ய அவர்கள் ஏதாவது செய்திருக்க வேண்டும் ஃஅப்படி செய்ததாக தெரியவில்லை. சிறுவர்கள் வேலைக்கு அமர்தும் தரகர் தொழில் பெருந்தோட்ட பகுதிகளில் பகிரங்கமாக நடக்கும் போது இந்த சட்டவிரோத செயலை கட்டுப்படுத்த எந்த ஆக்கப10ர்வமான நடவடிக்கையும் இல்லை. இந்த விடயத்தில் நாம் அரசை குறை கூற முடியாது. அனைத்து சிறுவர்களையும சமமாக மதித்து அரசின் சிறுவுர் மேம்பாட்டு சேவைகள் அனைத்து சிறுவர்களுக்குகிடைப்பதை உறுதி செய்வது அரசின் கடமையானாலும் அதனை தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வது அந்த மக்களின் அரசியல் பிரதிநிதிகள் கடமையாகும்.

சிறுவர் தொடர்பான அரசு சேவைகளை பெருந்தோட்ட மக்களுக்கும் விசேடமாக சிறுவருக்கும் கிடைப்பதை உறுதி செய்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி முழு மலையக சமூகததிலும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிரான பொதுக்கருத்தினை கட்டியெழுப்ப வேண்டும். மக்களையும் சிறுவர்களையும் இந்த விடயத்தில் நேரடியாக பங்கு பெறச் செய்து சிறுவர் உரிமை மீறலுக்கும் சிறுவர்களை வேலைக்க அமர்த்துவதற்கும் எதிரானதுமான பொது உணர்வை கட்டியெழுப்பாதவரை பெருந்தோட்ட பகுதியில் சிறவர்களை வேலைக்கு அமர்த்தும் பிரச்சனை ஒரு தொடர்கதையாகவே இருக்கப்போகிறது. சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் தரகர் தொழிலை இல்லாதொழிக்க சட்டப10ர்வமானதுமான நடவடிக்கை மாத்திரமல்ல தாக்கமுள்ள சமூக எதிர்பிக்கம் கட்யெழுப்படுவது அவசியம்.

சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கெதிரான உலக தினத்தில் ஆரம்பிக்கப்படும் இந்த விழிப்புணர்வவை ஆக்கபூர்வமான முறையில் நாம் முன்னெடுக்க மலையக சமூகத்தில் அக்கறை உள்ள யாவரும் முன்வர வேண்டும்.

No comments:

Post a Comment